கொரோனா விவகாரத்தில் மவுனம்; ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு எதிர்ப்பு

நியூயார்க் : கொரோனா பரவல் உலகம் முழுதும் ஏற்படுத்தி உள்ள பாதுகாப்பற்ற சூழல் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த மாதம் விவாதிக்க நேரம் ஒதுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உட்பட 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கவுன்சிலுக்கு தற்போது சீனா தலைமை வகித்து வருகிறது. இதன் பதவிக்காலம் இம்மாதம் 31ல் முடிவுக்கு வருகிறது. ஏப்ரல் முதல் கரீபிய தீவு நாடான டொமனிக்கன் குடியரசு தலைமை பொறுப்பை ஏற்கிறது.